Posts

Showing posts from September, 2009

இவர்தான் மனிதர்

"என்னுடைய 80-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது கட்சி. அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பிக் கொடுத்தேன். கோடி ரூபாயை வைத்து நான் என்ன செய்ய? தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டேன். கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர ஊழியராக இருந்தால் அலவன்ஸ் கொடுப்பார்கள். எனக்கு 2,500 ரூபாய் வருகிறது. என் மனைவி அற்புதம் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு ஓய்வூதியமாக 4,500 ரூபாய் வருகிறது. இதுதான் எங்களது வாழ்க்கைச் செலவுக்கான தொகை. அப்பா காலத்து வீடு, ஊரில் இருக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் கொஞ்சத்தை விற்றது போக பாக்கி மிச்சம் இருக்கிறது. இவை போதும் எனக்கு. இதற்கு மேல் வைத்திருந்து என்ன செய்யப் போகிறேன்?" - திரு.நல்லகண்ணு "ஆனந்த விகடன்" பேட்டியில் கூறியது

IT நாடோடிகள்

Image
IT நாடோடிகள் சசிகுமார்,பரணி,விஜய் மூவரும் வேறு வேறு IT கம்பெனிகளில் வேலை செய்யும் நண்பர்கள்.ஒரு நாள் சசிகுமார் வீட்டுக்கு வரும் அவனது நண்பர்கள் பாலா மற்றும் அருண் இருவரும் தாங்கள் வேலை செய்யும் கம்பெனியில் பாதி நாள் வேலை இல்லை என்றும் "career growth" நினைச்சு ரொம்ப பயமாக இருக்கிறது என்றும் புலம்புகிறார்கள்.பரிதாபப்படும் சசிகுமார் பாலாவுக்கு தனது கம்பெனி-லயும்,பரணி அருணுக்கு தனது கம்பெனி-லயும்,refer செய்து வேலை வாங்கி கொடுக்கிறார்கள்.ஒரு மாதம் கழித்து பாலா,"Onsite Oppurtunity" என்று சொல்லி வேறொரு கம்பெனிக்கும்,அருண் வேலை "hectica" இருக்கு என்று சொல்லி வேறொரு கம்பெனிக்கும் மாறி விடுகிறார்கள்.விஷயம் தெரிந்து டென்ஷன் ஆகும் சசிகுமார் குரூப்,என்ன செய்வதென்று கன்யாகுமரி திருவள்ளுவர் சிலை அருகே வைத்து discuss செய்கிறார்கள்.இறுதியாக இருவரையும் கடத்துவது என்றும்,ஆளுக்கு ஒரு "C++" program கொடுத்து எழுத செய்வது என்றும் முடிவெடுகிறார்கள்.ஆரம்பமாகிறது பர பர கிளைமாக்ஸ். "சம்போ சிவ சம்போ.......